
சிறுகதைகள்
short stories

தூமை
இந்த ‘நமக்கே நமக்குக் கருப்பை’, ‘நான் வயிற்றில் சுமந்த பிள்ளை’ – இந்த உணர்வு மயிரு மண்ணாங்கட்டி கதையெல்லாம் ஆண்கள் செய்யும் தந்திரம். அப்படியே நம்மை அடிமையாக்கி வீட்டுக்குள் உட்கார வைக்கப் பார்க்கிறார்கள்.

அழிபசி
அலைகளெல்லாம் உடல்களாய்த் தெரிந்த போதிலும் எட்டக் கைநீட்டினால் தொட்டுப் பிடித்தாடுவது போல விலகிக்கொண்டு மிதந்தோடுவர். பசிக்கப் பசிக்கக் கைநீட்டுவேன். வெறுமை மட்டுமே கையில் அகப்படும் கொடூரக் கனவுக்கடல்.

டைனோசர்
சட்டென என் தலைக்குப் பின்னிருந்த ஒளிவட்டம் நீங்கி என்னைச் சுற்றி இரும்புக்கூண்டும் எனக்குப் பின்னால் நீண்ட வெள்ளை வாலும் தோன்றியது போலிருந்தது. ஐநூறு ஆண்டுகள் காத்திருந்தது இதற்குத்தானா? தலையை உலுக்கிக்கொண்டேன். மாலினி கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஈறிலி
அது வலியைக் கொண்டாடும் சடங்கு. வலியோடு வாழவே மனிதம் விருப்பப்படுவது விந்தை. ஏதோ ஒரு வகையில் அவர்களது முடிவுகளை உருவாக்கும் அவர்களது உந்து சக்தி அந்த வலியாகத்தான் இருக்கக்கூடும் என்று எண்ணத் துவங்கியிருந்தேன்.

மஞ்சள் சுவர்த்தாள்
பாழாய்ப்போன அந்த வடிவக்கோடுகளைப் பார்வையால் கொஞ்சம் தொடர்ந்து போனோமேயானால் சட்டென்று எங்கோ மூர்க்கமான கோணங்களில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் அவை.