சாம்பல் தேவதைகள்
Sambal Thevathaigal is a Tamil crime thriller written by author Maya. The story follows Sub-Inspector Paval as she investigates a disturbing pattern of murders involving women living in the same apartment complex. As the investigation unfolds, the case leads to unexpected revelations about the killer and the motives behind the crimes.
உணர்ச்சி மிகுதியில் நடக்கும் குற்றங்களைக் கண்டறிய உணர்ச்சி துடைத்த லாஜிக்கல் ரீசனிங் மட்டும் போதுமா அல்லது இண்டியூஷனும் வேண்டுமா?
இரண்டுமே இருந்தாலும் ப்ரசென்ஸ் ஆஃப் மைண்ட் அதுவும் அவசியமென்று தனது முதல் ஹோமிசைட் கேஸ் மூலம் புரிந்துகொள்கிறாள் எஸ்.ஐ. பவள்.
2012-2013 காலகட்டத்தில் indusladies வலைத்தளத்தில் தொடர்கள் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது ஆங்கிலத்தில் எழுதிப் பரவலான ஆதரவைப் பெற்றுத் தந்த தொடர்- இளா. அந்த நாவலில் வந்த எஸ். ஐ பவள் பாத்திரத்தை வைத்து முழுநீள நாவல் எழுதும் எண்ணம் இருந்தது. அப்படி உருவானது தான் சாம்பல் தேவதைகள்.
இதுவும் 2012இல் ஆங்கிலத்தொடராக வந்தது. ஒரு நடுத்தர வர்க்கக்குடியிருப்பின் அன்றாட வாழ்வைத் திடீரெனப் புரட்டிப்போடும் தொடர்கொலைகள். தடயங்கள் காட்டும் பாதையோடு தன் உள்ளுணர்வையும் படிக்கும் வித்தை தெரிந்த ஒரு இளம் பெண் ஆய்வாளராக பவள் துப்பறியும் சுவராஸ்யமும் வேகமும் நிறைந்த கதை. தமிழில் அமேசானில் கிடைக்கிறது.
buy now
நூலைப் பெற
பிற த்ரில்லர் நூல்கள்



