கனவுலகு

வானம் லட்சம் மலர்களாய் பூத்து கனத்துக்கிடக்கிறது
இறங்கி மிதந்து என்னைப்பார்த்துச்சிரிக்கிறது
எட்டி விரல் தொட்டு வண்ணம் குழைக்க முயல்கிறேன்
அது மேகப்பந்துகளில் ஏறி ஒளிந்து கொண்டு கண்ணாம்பூச்சி காட்டுகிறது
எனக்குக்கீழே பூமி குளித்தும் துவட்டாத பிள்ளையின் தலை போல நுனி பனித்துக்கிடக்கிறது

அது தன் தண்ணீர் விரல்களால் என் முதுகை நெருடி முத்தமிட்டுக் கரைகிறது
என்னைச்சுற்றிய பெரும் வெளி அதை நிறைத்த பெருவளி எதுவும் எனக்குப்புலப்படவில்லை

என் கண்களை வானமே நிறைத்து நிற்கிறது
சிறு விழிகளுக்குள் அத்தனை பெரிய ஆகாயத்தை அடைக்க முடியவில்லை
கண்கள் மூடினால் கலைந்து விடுமோ என்ற பயத்தில் வெறித்துப்பார்த்தபடி கிடக்கிறேன்
கண்ணீர் பெருகி வழிந்து தரையின் பனியோடு கலந்தோடுகிறது

அசையாத உடலின் பிரஞ்ஞை மெல்லக்கரைகிறது
காற்றின் மோன கீதத்தில் அந்தப்பெருவெளியில் மிதக்கிறேன்
எனக்கான பாடல், நான் அறியாத பாடலை காற்று என் காதில் பாடுகிறது
நான் நானாகத்தெரிகிறேன் நானில்லாமலும் தெரிகிறேன்

வானம் அருகே வந்தது போலத் தோன்றுகிறது
மீண்டும் விரல் நீட்டுகிறேன், அது மேலே தாவிக்கொள்கிறது
அந்தப்பெருவெளியின் பிரம்மாண்டமாய் நான் தெரிகிறேன்
தனியளாய் அனைத்தும் நிறைத்துக்கிடக்கிறேன்.
பின் மீண்டும் தரையில் கிடக்கிறேன்

வானம் சிரிக்கிறது
காற்று பாடுகிறது
பூமி அணைக்கிறது

பின் திடீரென்று ஏதோவொன்று வந்து இமையகட்டிப்பிரிக்கிறது
கண்ணீர் துடைத்தபடி விழி விரித்துப்பார்க்கிறேன்
விடிந்து விட்டது.

Similar Posts

  • மாயக்காதல்

    முன்பெல்லாம் அது என் மேசையின்ஏதாவதொரு மூலையில் அல்லதுஎன் படுக்கைக்குப்பின் ஓளிந்திருக்கும்எனக்காய்த்தோன்றுகையில் நானாக தேடியெடுப்பேன்நாங்கள் கூடும் காலங்கள் எங்களுக்கு மாத்திரமானவையாருக்கும் தெரியாத சுகமான ரகசியங்கள்எதையும் என்னிடமிருந்து எதிர்பார்க்காது அதுகையடக்கமாய் விரிந்து என்விரல் சொல்லக்கேட்டபடி தன்னைச்செதுக்கிக்கொள்ளும் கூடிக்கலவி உச்சமடைந்து வார்த்தைகளை பிரசவித்தபின்மீண்டும் அவரவர் மூலைகளில் முடங்கிவிடுவோம்அப்படியொரு அமைதியான சுமுக உறவு எங்களுக்குள்இப்போதெல்லாம் அப்படியல்லஅது முற்றிலும் மாறிவிட்டதுஅதன் வடிவம் கலைந்துவிட்டதுஅதற்கு முகம் கூட வந்துவிட்டதுஒளிவதில்லை அது நித்தமென்னைத்தேடியலைகிறதுஎங்கிருந்தாலும் வந்து என் தலைக்குள் ஏறிக்கூத்தாடுகிறதுபிடிக்காத போதுகளிலும் கூட என் கரம்பற்றி இழுக்கிறதுஎங்கள் உறவு இனி எப்போதும்…

  • சுயம்

    ஒவ்வோரு கணமும் பெருக்கிறதுஎன்னைத்தனக்குள் அமிழ்த்துகிறதுஇருளிலும் மருட்டும் தவிர்க்கமுடியா நிழல்கடும்பசி கொண்டலையும் பேயன்ன அழல்கண்ணாடியில் உமிழ்கிறேன் எனக்குப் பதில்அங்கே அதன் பிம்பம் உரக்கச்சிரிப்பதால்நொடிதோறும் உணவுகேட்கிறதுமனம் உண்டு செறிக்கிறதுஅந்த நிழலின்றி இந்த நிஜம் இல்லைஅதைத்தொலைக்கும் வழி தெரியவில்லைகண்ணீர் வடிக்கும் என்னைப்பார்த்துகைகொட்டிச்சிரிக்கிறது என் சுயம்

  • துளி…

    நெடுநேரம் உள்ளங்கையில் ஏந்தியிருந்தேன்என் ஒற்றைக் கண்ணீர்த்துளிஉற்று நோக்கிக்கொண்டிருந்தேன்ஆவிப்புகை மீண்ட கண்ணாடி பிம்பம் போலஅதன் மேலே மெல்லத்தெரிகின்றனஆயிரம் கதைகளும்சில உடைந்த மெல்லிய இதயங்களும்ஒட்டுப்போட்ட உறவுகளும்காயப்பட்ட கனவுகளும்வலி தீண்டிய நினைவுகளும்நீண்ட அவதானிப்பின் பின்னிரவில்கண்ணீர்த்துளி கரைகிறதுதன் இறுதிப்பிரதிபலிப்பாய்அனுபவப்புன்னகையொன்றைபரிசளித்தபடி..

  • எது மாயை

    இரவின் பெருமோனத்தில் அங்கே நின்றேன் முடிவுகளோ கிளைகளோ அற்ற பெருவெளி நிலவும் மறந்துவிட்ட வறட்சி ததும்பிய பாலை சத்தமின்றி பாதம்தொட்ட கானல் அலைகளில் ஒரு துளி வெக்கை அள்ளிப் பருகினேன்.     உலகக்கண்ணீரின் உப்பெல்லாம் கொண்டிருந்தது அது அலையோசையில் கலந்திருந்த சிரியப்பிள்ளையின் குரல் உள்ளச்சுவற்றில் மோதி மோதி எதிரொலித்தது ஓரமாய் மக்கிக்கிடந்தன பல குண்டுதுளைத்த மீனவப்படகுகள் காற்றில் மீத்தேன் கலந்த கருகும் நெற்கதிரின் வீச்சம் முடியா இரவின் துகள்களெல்லாம் மீண்டும் மீண்டும் ஓராயிரம் அலைகள்.  …

  • அங்கே நான் இல்லை

    யாழும் குழலும் பண்ணும் இசைகூட்டாத பாடலொன்று தாளலயமோ நயமோ தேவையற்ற பாடல் உரத்து ஒலிக்கிறது… ஒலித்துக்கொண்டே இருக்கிறது எனக்கேயான ஒற்றைப்பாடல் அது யாருக்கும் கேட்பதில்லை என்னைத்தவிர துயிலோ விழிப்போ ஊடறுக்க முடியாத மிக நீண்ட பாடல் எத்தனைக்கூச்சல் நிறைந்த இடத்திலும் இந்தப்பாடல் தெளிவாய் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது பிற ஒலிக்கோர்வைகளின் மேலேறி உரத்து இசைக்கும் பாடல் அது சில சமயம் ஓலமாயும் சில போது இனிமைபொதிந்தும் சமயங்களில் வேகம் நிறைந்தும் அல்லது வெகு மெல்லிய முணுமுணுப்பாயும் அது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *