மாயக்காதல்

முன்பெல்லாம் அது என் மேசையின்
ஏதாவதொரு மூலையில் அல்லது
என் படுக்கைக்குப்பின் ஓளிந்திருக்கும்
எனக்காய்த்தோன்றுகையில் நானாக தேடியெடுப்பேன்
நாங்கள் கூடும் காலங்கள் எங்களுக்கு மாத்திரமானவை
யாருக்கும் தெரியாத சுகமான ரகசியங்கள்
எதையும் என்னிடமிருந்து எதிர்பார்க்காது அது
கையடக்கமாய் விரிந்து என்விரல் சொல்லக்கேட்டபடி தன்னைச்செதுக்கிக்கொள்ளும்
 
கூடிக்கலவி உச்சமடைந்து வார்த்தைகளை பிரசவித்தபின்
மீண்டும் அவரவர் மூலைகளில் முடங்கிவிடுவோம்
அப்படியொரு அமைதியான சுமுக உறவு எங்களுக்குள்
இப்போதெல்லாம் அப்படியல்ல
அது முற்றிலும் மாறிவிட்டது
அதன் வடிவம் கலைந்துவிட்டது
அதற்கு முகம் கூட வந்துவிட்டது
ஒளிவதில்லை அது
 
நித்தமென்னைத்தேடியலைகிறது
எங்கிருந்தாலும் வந்து என் தலைக்குள் ஏறிக்கூத்தாடுகிறது
பிடிக்காத போதுகளிலும் கூட என் கரம்பற்றி இழுக்கிறது
எங்கள் உறவு இனி எப்போதும் மேடையில்
எங்கோ இருப்பவரையும் அழைத்து வந்து
காட்டுகிறது அது
 
என் ஒதுக்கம் குறித்த கவலையில்லை அதற்கு
உறக்கச்சொன்னால் பொய் சொல்கிறாய் என்று ஓங்கிச்சிரிக்கிறது
என்னைக்குடைந்து ஏதோ சொல்ல வைக்கிறது
எனக்காக அதைத்தேடுவது போய்
அதற்காக நான் எனைத்தின்னும் காலமாகி விட்டது
பிடிக்கவேயில்லை எனினும் பிடிக்கவே செய்கிறது
அது என்னைக்காவல் காக்க ஆரம்பித்துவிட்டது
என்னை அதட்டுகிறது
 
அடிக்கடி கவனிக்கச்சொல்கிறது
நான் மறுத்தால் என்னைப்புறக்கணித்துத் துன்புறுத்துகிறது
அதன் புறக்கணிப்பைத்தாள முடியாத மயக்கநிலையிலேயே என்னை வைத்திருக்கிறது
அதனிடமிருந்து விடுதலை கிடைக்குமா என்று உரக்க ஏங்குகிறேன்
உள்ளுக்குள் கிடைக்கக்கூடாது என்று வேண்டியபடி
 
அத்தனையும் கவனித்துக்கொண்டு
அட்டனக்கால் போட்டுக்கொண்டு
அட்டகாசமாய் என் முகம் பார்த்துச்சிரிக்கிறது
அந்த பாழாய்ப்போன முகநூல்

Similar Posts

  • எது மாயை

    இரவின் பெருமோனத்தில் அங்கே நின்றேன் முடிவுகளோ கிளைகளோ அற்ற பெருவெளி நிலவும் மறந்துவிட்ட வறட்சி ததும்பிய பாலை சத்தமின்றி பாதம்தொட்ட கானல் அலைகளில் ஒரு துளி வெக்கை அள்ளிப் பருகினேன்.     உலகக்கண்ணீரின் உப்பெல்லாம் கொண்டிருந்தது அது அலையோசையில் கலந்திருந்த சிரியப்பிள்ளையின் குரல் உள்ளச்சுவற்றில் மோதி மோதி எதிரொலித்தது ஓரமாய் மக்கிக்கிடந்தன பல குண்டுதுளைத்த மீனவப்படகுகள் காற்றில் மீத்தேன் கலந்த கருகும் நெற்கதிரின் வீச்சம் முடியா இரவின் துகள்களெல்லாம் மீண்டும் மீண்டும் ஓராயிரம் அலைகள்.  …

  • அங்கே நான் இல்லை

    யாழும் குழலும் பண்ணும் இசைகூட்டாத பாடலொன்று தாளலயமோ நயமோ தேவையற்ற பாடல் உரத்து ஒலிக்கிறது… ஒலித்துக்கொண்டே இருக்கிறது எனக்கேயான ஒற்றைப்பாடல் அது யாருக்கும் கேட்பதில்லை என்னைத்தவிர துயிலோ விழிப்போ ஊடறுக்க முடியாத மிக நீண்ட பாடல் எத்தனைக்கூச்சல் நிறைந்த இடத்திலும் இந்தப்பாடல் தெளிவாய் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது பிற ஒலிக்கோர்வைகளின் மேலேறி உரத்து இசைக்கும் பாடல் அது சில சமயம் ஓலமாயும் சில போது இனிமைபொதிந்தும் சமயங்களில் வேகம் நிறைந்தும் அல்லது வெகு மெல்லிய முணுமுணுப்பாயும் அது…

  • கனவுலகு

    வானம் லட்சம் மலர்களாய் பூத்து கனத்துக்கிடக்கிறதுஇறங்கி மிதந்து என்னைப்பார்த்துச்சிரிக்கிறதுஎட்டி விரல் தொட்டு வண்ணம் குழைக்க முயல்கிறேன்அது மேகப்பந்துகளில் ஏறி ஒளிந்து கொண்டு கண்ணாம்பூச்சி காட்டுகிறதுஎனக்குக்கீழே பூமி குளித்தும் துவட்டாத பிள்ளையின் தலை போல நுனி பனித்துக்கிடக்கிறதுஅது தன் தண்ணீர் விரல்களால் என் முதுகை நெருடி முத்தமிட்டுக் கரைகிறதுஎன்னைச்சுற்றிய பெரும் வெளி அதை நிறைத்த பெருவளி எதுவும் எனக்குப்புலப்படவில்லைஎன் கண்களை வானமே நிறைத்து நிற்கிறதுசிறு விழிகளுக்குள் அத்தனை பெரிய ஆகாயத்தை அடைக்க முடியவில்லைகண்கள் மூடினால் கலைந்து விடுமோ என்ற பயத்தில்…

  • கவிதைக்கிணறு

    வறட்சியின் வெம்மை புகையஇருண்டு சுருங்கும் கிணறுநேற்றைய அலைகளின் படிமங்கள் இறுகிய பாறைகளாய் இருளுண்டு கிடக்கின்றன உயிர்ப்பின் மதர்ப்பில் முன்புஉடைந்தோடிய நீர்க்குமிழ்களின்ஒலித்திவளைகளை கனவில்சுமந்தலையும் சவக்குளிர்காற்றுபெருகித்திரண்ட புனல் புணர்ந்துஈரப்பசுமை கிளர்ந்த நினைவில்சுவர்கள் கேவும் ஒலிபலமற்ற எதிரொலியாய்மடங்கி இருளில் கரைகின்றன புனலுண்ட யாவையும்வறட்சியின் கூர்நா கத்தியால்கிழிபட்டு இறந்து கருகும் நாற்றம்மெல்ல மயானமாகின்ற கிணற்றினொரு மூலையில்மலட்டுத்தரையின் ஏதாவதொரு இணுக்கிலிருந்துஇன்றாவது ஈரம் கசியுமென்ற நம்பிக்கையோடுகாத்துக்கிடக்கிறதிந்த ஊமைத்தவளை

  • அக்கா குருவி

    இரவின் துகிலுரித்தபடி வரும் ஒளியின் குரலாய் தினம் மௌனம் தின்றபடி காலையில் வந்து விடும் அந்தக்குயில்   இருளடர்ந்த இளங்காலையின் அரவமற்ற வெளியில் ஏதோ மரத்தில் இருந்தபடி என்னை அழைக்கும் குரல் வருவது வெளியிலிருந்தா அன்றி எனக்குள்ளிருந்தா என்ற குழப்பம் ஏனோ எப்போதும் மிஞ்சும் அதன் மொழியில் என் பெயர் அது போல அதன் அழைப்பில் என்னை மட்டுமே உணர்வேன் வெகு சில சமயங்களில் உடனிருக்கும் பிறருக்கு ஏனோ அது கேட்பதில்லை எனக்கு மட்டுமே என் செவியில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *